லெபனானில் கைது செய்யப்பட்டிருக்கும் பெண், அல் பக்தாதியின் மனைவியல்ல - ஈராக் உள்துறை அமைச்சு

Share it:
ad
லெபனானில் கைது செய்யப்பட்டிருக் கும் பெண் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) தலைவர் அபு+ பக்கர் அல் பக்தாதியின் மனைவியல்ல என்று ஈராக் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டிருக்கும் சஜh அல் துலைமி, பஸ்ரா மற்றும் அல் பதா குண்டு தாக்குதல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட உமர் அல் துலைமியின் சகோதரியாவார் என்று அமைச்சு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களோடு குறித்த பெண் தனது மகனுடன் 10 தினங்களுக்கு முன் லெபனானுக்குள் நுழைந்தபோது இராணுவ உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சஜh அல் துலைமி, அல் பக்தாதியின் மனைவி என்று லெபனான் தொடர்ந்து நம்பிவருவதாக உறுதிப்படுத் தப்படாத செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதன்படி ஈராக் அரசு நிராகரித்த போதும் குறித்த பெண் பக்தாதியின் இந்நாள் அல்லது முன்னாள் மனைவி என்று நம்புவதாக லெபனான் இராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. ஐ.எஸ். தலைவர் பக்தாதியின் மனைவிகள் அஸ்மா பவ்சி முஹமது அல் துலைமி மற்றும் இஸ்ரா மஹல் அல் குவைஸி ஆகியோர் என நம்புவதாக ஈராக் அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: