மனித நேயமிக்க தலைவரே மஹிந்த, மைத்திரிபால அராஜக தீர்மானத்தையே எடுத்துள்ளார் - டிலான் பெரேரா

Share it:
ad
நாட்டுக்கு கேடு விளைவிக்கும் யானை, புலி, என். ஜீ. ஓ. அமைப்புக்கள் எவ்வளவு ஒப்பந்தங்களைச் செய்தாலும் நாட்டு மக்களும். நாமும் ஜனாதிபதியுடனேயே இருப்போம் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு யானை, புலி, என். ஜீ. ஓக்கள் திட்டம் தீட்டுகின்றனர். ஆளும் கட்சியின் சில அரசியல்வதிகள் இச்சக்திகளின் கைப்பொம்மையாகி இருப்பதும் கவலை தரும் விடயம் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். தமது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தொடர்ந்து பேசிய அமைச்சர், வரலாற்றைக் குழிதோண்டிப் புதைக்க முடியாது. கிளைக்கு கிளை பாயும் பட்சி நனைந்து செத்துவிடும். எமது கட்சியின் பல செயலாளர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்துக் கொண்டு ஆளும் கட்சியிலிருந்து எதிர்க் கட்சிக்குச் சென்று அரசியல் வெற்றுப் பெட்டியில் போய் விழுந்தனர். சிலர் மீண்டும் ஆளும் கட்சிக்கு வந்தனர்.

எமது கட்சிச் செயலாளரும் அறுந்த கயிறை கடைசி நேரத்தில் பிடித்துள்ளார். பதவிகள் தற்காலிகமானவை. ஆனால் மனிதநேயம் நிலையானது. அத்தகைய நிலையான மனித நேயம் உள்ள தலைவரே ஜனாதிபதி ஆவார். மைத்திரிபால சிரிசேன அண்மைக்கால வரலாற்றில் அராஜகமான தீர்மானத்தையே எடுத்துள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Share it:

Post A Comment:

0 comments: