பாராளுமன்றத்தில் தற்போதைய அரசாங்கத்தின் பலம் 141 ஆக குறை­வ­டைந்­தது

Share it:
ad

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் நேற்­றைய தினம் வில­கி­ய­தை­ய­டுத்து ஆளும் தரப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 141 ஆக குறை­வ­டைந்­துள்­ளது.

இது­வரை ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து 23 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளி­யே­றி­யுள்­ளனர். இந்த 23 பேரில் மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆறு உறுப்­பி­னர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

தேர்தல் அறி­விப்பு வெளி­வரும் வரை ஆளும் கூட்­ட­ணியில் பாரா­ளு­மன்­றத்தில் 162 எம்.பி.க்கள் இருந்­தனர். இந்­நி­லையில் தேர்தல் அறி­விக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து நேற்று வரை சுதந்­திரக் கட்­சி­யி­ருந்து 6 எம்.பி.க்கள் வெளி­யே­றி­யுள்­ளனர்.

பொது வேட்­பாளர் மைத்­தி­ரிபால சிறி­சேன மற்றும் ராஜித சேனா­ரத்ன, துமிந்த திசா­நா­யக்க, எம்.டி.கே.எஸ். குண­வர்­தன, வசந்த சேனா­நா­யக்க மற்றும் நவீன் திசா­நா­யக்க ஆகி­யோரே சுதந்­திரக் கட்­சி­யி­லிருந்து வெ ளியே­றி­யோ­ராவர்.

மேலும் லிபரல் கட்­சியின் தலைவர் பேரா­சி­ரியர் ரஜீவ விஜே­சிங்க எம்.பி.யும் வெளி­யே­றினார்.

அத்­துடன் கண்டி மாவட்­டத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­ஜ­து­ரையும் மலையக மக்கள் முன்­ன­ணியின் இராதாகிருஷ்ணன் எம்.பி. மற்றும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலைவர் திகாம்­பரம் எம்.பி. ஆகி­யோரும் அர­சாங்­கத்தை விட்டு வில­கினர்.

வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாரூக்கும் அர­சாங்­கத்தை விட்டு வெளியே­றினார்.

அத்­துடன் ஜாதிக ஹெல உறு­ம­யவின் எம்.பி.க்களான சம்­பிக்க ரண­வக்க, அத்­து­ர­லியே ரத்ன தேரர் ஆகிய இரு­வரும் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கினர்.

இத­னை­ய­டுத்து அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் எம்.பி.க்களான ரிஷாத் பதி­யுதீன் மற்றும் அமீர் அலி ஆகி­யோரும் அர­சாங்­கத்தை விட்டு வெளியே­றினர்.

இந்­நி­லையில் நேற்­றைய தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், பஷீர் சேகு­தாவூத், ஹஸன் அலி, பைசல் காசிம், ஹரீஸ், முத்­தலிப் பாவா பாரூக், அஸ்லம், தௌபீக் ஆகிய 8 எம்.பி.க்களும் அர­சாங்­கத்­திற்­கான தமது ஆத­ரவை விலக்கிக் கொண்­டனர்.

இதன்­படி மொத்­த­மாக ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து இது­வரை 23 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வெளியே­றி­யுள்­ளனர்.

இதனால் 162 ஆக இருந்த அர­சாங்­கத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 139 ஆக குறை­வ­டைந்த போதும் ஐ.தே.க.விலிருந்து திஸ்ஸ அத்தநாயக்கவும் ஜனநாயகக் கட்சியிலிருந்து ஜயந்த கெட்டகொடவும் ஆளும் தரப்பிற்கு தாவியதால் ஆளும் கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 141 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share it:

Post A Comment:

0 comments: