கன்னி சந்திப்பு

Share it:
ad
-Tm-

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிடவிருக்கின்ற முன்னாள் சுகாதார அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சித்தலைவருமான ரணில் விக்ரமசிங்களுக்கும் இடையில் இன்று புதன்கிழமை சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது கட்சி அமைப்பாளர்கள், மாவட்ட முகாமையாளர்ளக் மற்றும் மாகாண, உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்க்கட்சித்தலைவருக்கும் எதிரணியின் பொது வேட்பாளருக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக இடம்பெறும் கன்னிசந்திப்பாகும். 
Share it:

Post A Comment:

0 comments: