ஒழுக்கமுள்ள சமுகம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் தாம் இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உலகை வெற்றி பெறும் பிள்ளைகளை உருவாக்க, ஒழுக்கத்துடன் கூடிய சமுகம் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.
மாத்தளை – ரத்தொட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இந்த கருத்தைக் கூறியுள்ளார்.
யுத்தத்தை நிறைவு செய்து, நாட்டை பாதுகாக்குமாறு மக்கள் எனக்கு ஒரு பொறுப்பை வழங்கினார்கள்.
அதனை நிறைவு செய்து, மீண்டும் மக்களிடம் வந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக மக்களின் ஆணையை கேட்டேன்.
அதன்படி அதற்கும் அவர்கள் ஆணையை கொடுத்தார்கள்.
தற்போது நாட்டில் ஒழுக்கமான சமுகத்தை உருவாக்க தாம் மக்களின் ஆணையை கோரி தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியுள்ளார்.
Post A Comment:
0 comments: