ரங்காவுக்கு கண்ணத்தில் அறைந்த, அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு வாழ்த்துக்கள்..!

Share it:
ad
(முஸ்தாக் அஹ்மட்)

மின்னல் நிகழ்ச்சியில் முஸ்லிம் அரசியல்வாதிகளை மோதவிட்டு, வேடிக்கை பார்க்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரங்காவுக்கு ஜனாதிபதி மாளிகையில் நின்றுகொண்டு, கண்ணத்தில் அறைந்த அமைச்சர் றிசாத் பதியுதினுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் தொடர்தேர்ச்சியாக தொலைபேசி அழைப்பெடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சுனாமி ஏற்பட்டபோது, மின்னல் ரங்கா அப்போது முல்லைத்தீவுக்கு சென்றிருந்தார். அதன்போது புலிகளின் கடற்படை பொறுப்பாளராக செயற்பட்ட சூசையும் ரங்காவின் கண்ணத்தில் ஓங்கி அறைவிட்டிருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் மின்னல் ரங்கா கண்ணத்தில் அடி வாங்குவது இது இரண்டாவது தடவையாகும்.

அதேவேளை மின்னல் ரங்கா மீது அமைச்சர் றிசாத் பதியுதீன் கண்ணத்தில் அடித்தமையை வரவேற்று முஸ்லிம் சகோதரர்கள் பலர் தமது பேஸ்புக் பக்கங்களிலும் பதிவுகளை இட்டுள்ளனர்.

Share it:

Post A Comment:

0 comments: