தினமும் பிரசவமாகவிருந்த 'நவமணி' யின் கனவு தகர்க்கப்பட்டது...!

Share it:
ad
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம்களின் முழுக்கட்டுப்பாட்டில் இன்னும் சில நாட்களில் நவமணி பத்திரிகை தினமும் வெளியாகவிருந்தது.

அதற்கான ஆயத்தப்பணிகளும், அறிவிப்புகளும்கூட வெளியாகியிருந்தன.

இருந்தபோதும் அந்தத்திட்டம் தற்போது கைவிடப்பட்டு, முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் உதவியுடனும், முஸ்லிம் பணக்காரர் சிலரின் ஒத்துழைப்புடனும் மற்றுமொரு பெயரில் முஸ்லிம் பத்திரிகை ஒன்று தினமும் வெளிவரவுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

நவமணி பத்திரிகை  தினமும் மலருமென எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இதன்மூலம் அதிர்ச்சியும், கவலையும் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கான முயற்சியில் ஈடுபட்ட, தினமும் வெளியாகும் நவமணி பத்திரிகை குறித்து கனவு கண்ட மூத்த ஊடகவிலாளர்கள், ஊடக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட மற்றும் பல தரப்பினரும் இதனால் கவலையடடைந்திருப்பதையும் ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் உணரக்கூடியதாகவுள்ளது.
Share it:

Post A Comment:

0 comments: