எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அந்தகட்சியின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்த போதே இந்த ஆதரவை வெளியிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கோரிக்கைகள் உள்ளடங்கிய ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments: