இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) சிரியாவில் போர் விமான தளமொன்றைக் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா மனித உரிமைகள் மையம் இது குறித்து சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்த விவரம்: சிரியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தீயிர்-அல்-ஜூர் போர் விமான தளத்தைக் கைப்பற்ற கடந்த சில நாட்களாக ஐ.எஸ். கடும் தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், விமான தள வாயிற்பகுதியில் சனிக்கிழமை கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இதையடுத்து, விமான தளம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) வசம் வீழ்ந்தது எனக் கூறப்படுகிறது.
தீயிர்-அல்-ஜூர் மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகள் ஐ.எஸ். பிடியில் சிக்கியிருந்த நிலையில், போர் விமான தளம் மட்டும் அரசுப் படையினர் வசம் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த விமான தளம் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பிடியில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Post A Comment:
0 comments: