பக்ரைனில் மன்னரின் போட்டோவை, கிழித்த பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை

Share it:
ad
பக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஷைனாப் அல்–கவாஜா. கடந்த அக்டோபர் மாதம் இவர் பக்ரைன் மன்னரின் போட்டோவை பொது இடத்தில் வைத்து கிழித்தெறிந்தார்.

அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கோர்ட்டில் ஆஜரான ஷைனாப் அல்–கவாஜா, தான் செய்தது குற்றமல்ல என வாதிட்டார். அதை கோர்ட்டு ஏற்றுக் கொள்ள வில்லை.

அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்தது.
Share it:

Post A Comment:

0 comments: