குண்டாந்தடிகளும் துப்பாக்கி ரவைகளும்
ஆன்மாக்களை அழித்த்தாலும்
அங்கங்களை சிதைத்தாலும்அடிபணிய போவதில்லை
இது இன்றய நிஜம்
சாக்கடையை வசந்தத்தின் பூங்காவானம் என்று
மூளைச்சலவை செய்த
அடைமொழிகளும் புனைக்கதைகளும் தோற்றன
அதர்மம் தலை நிமிர
தர்மம் வேண்டி நிற்கும் எம்மினத்தின் தலைகள்
விற்கப்படுகின்றன
எமது இருப்புக்களின் உரிமை செருப்புக்களாக
இனவாதத்தின் பாதங்கள் இனியும் அணிய முடியாது
நாங்கள் செருப்புகள் அல்ல
சுட்டெரிக்கம் நெருப்பு
இது எமது நாள்
அக்கிரமத்த்தின் மரண ஊர்வலத்தில்
பட்டாசு கொளுத்தி பாற்சோறு தின்னும் நாள்
வெறிச்சோடிய உங்களின் மனச்சாட்சிகளில்
நம்பிக்கையை தேடுவது
பிணத்திற்கு உயிர் கொடுக்கும் கற்பனை போன்றது
muhamed irfan
Post A Comment:
0 comments: