ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தொடரும் வகையில் அரசியல் அமைப்பு சீர்திருத்தப்படும் என்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் அமைப்பின் படி ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது. எனினும் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி இடம்பெறவிருக்கும் தேர்தலில் மக்களினால் அமைக்கப்படும் ஆட்சியில் ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தொடரும் வகையில் அரசியல் அமைப்பில் சீர்த்திருத்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.



Post A Comment:
0 comments: