தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று, அரசாங்கம் பெரும் வன்முறைகளில் ஈடுபடலாம் - சந்திரிகா

Share it:
ad
உலகநாடுகள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று அரசாங்கம் பெரும் வன்முறைகளில் ஈடுபடலாம், எதிரணியினரை அச்சுறுத்தலாம். முன்னர் இடம்பெற்ற தேர்தல்களிலும் இது இடம்பெற்றுள்ளது,

அதிகளவான தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்பி தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதை மாத்திரமே உலகநாடுகளால் செய்ய முடியும்.

அரசாங்கத்திற்கு அவர்கள் நீதியான சுதந்திரமான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தலாம். ஆனால் அவை செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: