மைத்திரிபலவுக்காக வாக்கு கேட்டு வந்தால், அவர்களை மரத்தில் கட்டிவைத்து அடியுங்கள்

Share it:
ad
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் வாக்கு சேகரிக்கும் நபர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்குமாறு ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதி கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவே இதனை தெரிவித்துள்ளார்.

நாவுல நகரில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

என்னை கொலை செய்வதற்கு ஒப்பந்தமொன்று வழங்கப்பட்டுள்ளது. கிரிவான சல்லிய கந்த அருகாமையில் என்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நாம் துப்பாக்கி தோட்டாக்களுக்கு பயந்தவர்கள் அல்ல. கொலை செய்யப்பட்டால் கொலை செய்தவர்களை கொல்ல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள்.

நான் எதிர்க்கட்சிக்கு போக போகின்றேன்,மைத்திரிக்கு வாக்களியுங்கள் என கேட்டு கொண்டு வருவார்கள். அவ்வாறு வருபவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்குமாறு கிராம மக்களிடம் கோருகின்றேன்.

நந்திக்கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க திட்டமிட்டதனை விடவும் ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்டு வெற்றியீட்டுவோம் என லக்ஸ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: