கொள்கை அற்ற அரசியல்வாதிகள் காரணமாக தாம் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரக்தியடைந்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
தற்போதைய அரசியல் தொடர்பாக சிந்திக்கும் போது வனவாசம் செல்ல தோன்றுகிறது. அவர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் ஒழுங்கற்ற முறையில் உள்ளதாக குற்றம்சாட்டினார்.
கொள்கையற்ற, கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படாத பலவீனமான நிலைமைக்கு இலங்கையின் அரசியல் கலாச்சாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அத்துரலியே ரத்தின தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments: