ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்படும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அறிவித்துள்ளார்.
அமைச்சர் அதாவுல்லா உட்பட அந்த கட்சியின் பிரதிநிதிகள் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
வடக்கு, கிழக்கை இரண்டாக பிரிப்பது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்பது ஆகியன 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி முன்வைத்த பிரதான கோரிக்கை எனவும் மூன்று வருடங்களில் ஜனாதிபதி தமது கோரிக்கையை நிறைவேற்றியதாகவும் தேசிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
Post A Comment:
0 comments: