எதிர்வரும் தேர்தலில் அன்னப் பறவை முன்பாக புள்ளடியிடுங்கள் - மைத்திரிபால சிறிசேன

Share it:
ad
நாட்டை கட்டியெழுப்புவதா? தனிப்பட்ட அரச குடும்பத்தை கட்டியெழுப்புவதாக என எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்ற இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சிறிலங்கா சுதந்திர கட்சியினர் அரசாங்கத்தை அமைத்துள்ள போதிலும், அரசாங்கத்தினுள் அந்த கட்சி இல்லை என தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பது மாத்திரமன்றி சிறிலங்கா சுதந்திர கட்சி மீண்டும் பண்டாரநாயக்காவின் கொள்கைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்கட்சியில் இணைந்துள்ள அனைத்து கட்சிகளும் நிலையாக ஒன்றிணைந்து இருக்க வேண்டும். இந்தநிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி பொதுமக்கள் நாட்டை கட்டியெழுப்புவதா, குடும்பமொன்றை கட்டியெழுப்புவதா என தீர்மானிப்பாளர்கள்.

அரசாங்கத்தில் இருந்து மேலும் சிலர் எதிர்வரும் நாட்களில் தம்முடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் பொது வேட்பாளர் தெரிவித்தார்.

அரசாங்கம் பலவிதத்திலும் தம்மைப் பற்றி போலியான பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்லவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிராம மட்டத்தில் அரசாங்கம் பொருட்களை விநியோகித்து வந்த போதும், எதிர்வரும் தேர்தலில் அன்னப் பறவை முன்பாக புள்ளடியிடுங்கள் என்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: