முஸ்லிம் அடிப்­ப­டை­வாதி­கள் எதி­ர­ணிக்கு ஆத­ரவு, மைத்திரி வெற்றிபெற்றால் பௌத்­தர்­க­ளுக்கு சாவு­ம­ணி­

Share it:
ad
மலே­சியா, சிங்­கப்பூர், இங்­கி­லாந்து ஊடாக இலங்­கைக்கு எதி­ரான சதித்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தோடு கோடிக்­க­ணக்­கான பணமும் பொது எதி­ர­ணிக்கு வந்து சேர்­கி­றது. எனவே ஜனா­தி­பதித் தேர்­தலில் இவ் அணி வெற்றி பெற்றால் அது சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு சாவு­ம­ணி­யாக அமையும் என எச்­ச­ரிக்கை விடுக்கும் பொது­பல சேனா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்­கை­யிலும் தலை­தூக்­கலாம். எனவே உளவுப் பிரி­வினர் உஷா­ராக இருக்க வேண்­டு­மென்றும் அவ் அமைப்பு தெரி­வித்­தது.

கொழும்பு கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­பல சேனா அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இங்கு உரை­யாற்­றிய பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்,

சந்­தி­ரி­காவின் 'ஈ' திட்­டத்தின் கீழ் சர்­வ­தேசம் மற்றும் தேசிய சதி­கா­ரர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்டு நாட்டின் சமா­தா­னத்தை சீர்­கு­லைக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

பொது எதி­ர­ணியை சுற்றி முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்­ப­டை­வாதச் சக்­தி­களே உள்­ளன.புத்தர் மனித மாமிசம் உட்­கொண்டார் என பிர­சாரம் செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பு உட்­பட முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­களும் கிறிஸ்­தவ அடிப்­ப­டை­வாத அமைப்­புக்­க­ளுமே பொது எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

இது மிகவும் பயங்­க­ர­மா­னது இவ் அணி வெற்றி பெற்றால் சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு அதுவே சாவு­மணியாக அமையும்.அது மட்­டு­மல்­லாது பொது எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால கூறு­கின்றார் 100 நாட்­க­ளுக்குள் நிறை­வேற்று அதி­காரம் ஒழிக்­கப்­ப­டு­மென்று.

மறு­புறம் ரணில் சொல்­கிறார் ஜே.ஆரின் அர­சி­ய­ல­மைப்பு முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­ட­மாட்­டாது. திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படும் என்­கிறார்.இவ் அணியில் ஒரே கொள்­கை­யு­டைய தலைவர் இல்லை. பலரும் பல்­வேறு கொள்­கை­களை கொண்­டுள்­ளனர்.

இவர்­களால் எப்­படி நாட்­டுக்கு தலை­மைத்­து­வத்தை வழங்க முடியும்.இந்த ஜனா­தி­பதி தேர்தல் நாட்­டுக்கு தீர்க்­க­மா­னது. சர்­வ­தேச, உள்­நாட்டு சதி­கா­ரர்­களால் நாடு சுற்றி வளைக்­கப்­பட்­டுள்­ளது.

மலே­சியா, இங்­கி­லாந்து, சிங்­கப்பூர் ஊடா­கவே இச்­சக்தி முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தோடு அந்­நா­டுகள் ஊடாக பல கோடி ரூபாய் இவ் அணிக்கு வந்து சேர்­கின்­றது.இந்­தி­யா­விலும் உல­கிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லிம் பயங்­க­ர­வாதம் வியா­பித்துக் கொண்டு வரு­கின்­றது. இலங்­கையின் கிழக்கில் முஸ்லிம் பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் தலை­தூக்கி வரு­வ­தாக அமெ­ரிக்க உளவுப் பிரி­வான சி.ஐ.ஏ. யும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. தொழில் செய்­யாமல் கஷ்­டப்­ப­டாமல் பணம் உழைக்கக் கூடி­ய­துதான் பயங்­க­ர­வாதம். எனவே எமது உளவுப் பிரி­வினர் உஷா­ராக இருக்க வேண்டும்.

பணம் கொடுத்து எத­னையும் செய்யும் நிலைமை நாட்­டுக்குள் தலை தூக்­கி­யுள்­ளது.கடந்த காலங்­களில் இங்கு வந்த வெளி­நாட்­ட­வர்கள் பணம் கொடுத்து தேசிய அடை­யாள அட்டை கடவுச் சீட்­டுக்­களை பெற்­றனர்.

இது தொடர்பில் நாங்கள் பாது­காப்பு தரப்­பி­ன­ருக்கு அறி­வித்து அதற்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. வெளி­நாட்­ட­வர்கள் ஏன் இங்கு வந்து இவற்றை பெற வேண்டும். எதற்­காக என்­பது தொடர்பில் அவ­தா­ன­மாக இருக்க வேண்டும்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை நினைத்து வாக்களியுங்கள் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்ததேரர், நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகேயும் கலந்து கொண்டனர்.
Share it:

Post A Comment:

0 comments: