மூத்த ஊடகவியலாளர் தாஜுத்தீன் கலாபூஷணம் விருது பெற்றார்

Share it:
ad
கலாசார திணைக்களத்தின் மூலம் வருடா வருடம் நடாத்தப்படும் 30வது கலாபூஷண அரச விருது வழங்கும் விழா இன்று (14) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-07 பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பீ.ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறற்ற நிகழ்வில் இம்முறை சிங்கள கலைஞர்கள் 273 பேருக்கும், தமிழ் கலைஞர்கள் 100 பேருக்கும், முஸ்லிம் கலைஞர்கள் 28 பேருக்குமாக மொத்தம் 398 பேருக்கு  கலாபூஷண விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது பலகத்துறை (கம்மல்துறை) மூத்த ஊடகவியலாளர் தாஜுத்தீனும்  கலாபூஷண அரச விருதை கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பீ.ஏக்கநாயக்கவிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதன்போது பிடிக்கப்ட்ட படத்தை இங்கு காண்கிறீர்கள்.


Share it:

Post A Comment:

0 comments: