''நான் வெட்கமடைந்தேன்'' மைத்திரிபால சிறிசேன

Share it:
ad
எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள தமது அரசாங்கத்தின் அமைச்சரவை 30க்கு உட்பட்டதாக இருக்கும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாவனெல்ல நகரில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அரசாங்கத்தில் 63 அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அமைச்சராக பதவியேற்கும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் நான் இதனை தெரிவித்திருந்தேன். இதற்காக நான் அமைச்சராக பதவியேற்கும் போது வெட்கமடைந்தேன்.

நாட்டில் 63 அமைச்சரவை அமைச்சர்கள் இருக்கிறார்கள். 57 பிரதியமைச்சர்கள் இருக்கிறார்கள். எந்த அரசாங்கத்திலும் இப்படியொரு அமைச்சர்கள் எண்ணிக்கை இருந்ததில்லை.

இந்தநிலையில், தமது அரசாங்கத்தில் 30 அமைச்சர்களை விட அதிகரிக்கப்பட மாட்டாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: