காத்தான்குடிக்கு வருகிறார் மஹிந்த ராஜபக்ஸ

Share it:
ad
 (பழுலுல்லாஹ் பர்ஹான்)

எதிர்வரும் 19-12-2014 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி ரெலிகோம் வீதியில் நிறுவப்;பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்;றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ் விஜயம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவிக்கையில் 19-12-2014 வெள்ளிக்கிழமை காத்தான்குடி விஜயம் செய்யும் ஜனாதிபதி அன்றைய தினம் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதே வேளை ஜனாதிபதியின் குறித்த விஜயம் தொடர்பில் 14-12-2014 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அங்கு ஜனாதிபதி விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட்டார்.

Share it:

Post A Comment:

0 comments: