கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட 90 சதவீதமானவர்கள் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், இதுவே முஸ்லிம் சமூகத்தினதும் விருப்பம் எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கோடிட்டுக் காட்டினார்.
கூடவுள்ள முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் மைத்திரிக்கு ஆதரவு என்ற இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதுடன், தமது கட்சி மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் ஒத்துக்கொண்டார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளிப்பது என்ற முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மன்சூர் ஆகியோர் உடன்பட மறுத்துவருவதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் அந்த முக்கியஸ்தர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
Post A Comment:
0 comments: