காத்தான்குடியில் நீலப் படை அணியினர்

Share it:
ad

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

எதிர்வரும் 19-12-2014 வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள 2015 ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் உரையாற்றவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  காத்தான்குடியில் ;  கலந்து கொள்ளவுள்ள தேர்தல் மேடையை அமைப்பதற்காக நீலப் படை அணியினர் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

குறித்த தேர்தல் மேடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முகவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் 15-12-2014 நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் செய்தார்.



Share it:

Post A Comment:

0 comments: