''வயதான கோழி எப்படி கொக்கரித்தாலும், முட்டை கிடைக்காது''

Share it:
ad
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போது வயதான கோழி போல கொக்கரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வயதான கோழி எப்படி கொக்கரித்தாலும் முட்டை கிடைக்காது என்பது நாட்டின் புத்தியுள்ள மக்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதி அமைச்சர்களாக இருந்த இராதாகிருஸ்ணன் மற்றும் திகம்பரம் ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியதை இங்கு சுட்டிக்காட்டிய நிமல் பியதிஸ்ஸ, அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமை காரணமாகவே கட்சியில் இருந்து விலகியதாக கூறியது பச்சைப் பொய் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50000 வீடுகள் கட்டிக்கொடுக்க முன்மொழியப்பட்டமையையும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

அவர்கள் கட்சியூடாக அயல் நாடுகளுக்கு உளவு பார்க்கும் பணிக்காகவே மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கியதாகவும் நிமல் பியதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

Share it:

Post A Comment:

0 comments: