ஹக்கீம் - ஹசன் அலி முறுகலா...?

Share it:
ad
(ஏ.எச்.எம். பூமுதீன்)

முஸ்லிம் காங்கிரஸி;ன மத்திய குழு வெள்ளிக்கிழமை கூடி தீர்மானித்ததற்கு இணங்க இன்று (02) நடைபெறவுள்ள அம்பாரை மாவட்ட மு.கா மத்திய குழு கூட்டத்திற்கு கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி சமுகமளிக்கமாட்டார் என நம்பகரமாக தெரியவருகின்றது.

முகா தலைவர் ரவுப் ஹக்கீம் - மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க திரைமறைவில் எடுத்துள்ள தீர்மானித்தை அறிந்ததன் பிற்பாடே ஹசன் அலி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. 
முகா தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட அம்பாரை மாவட்ட முகா பிரமுகர்கள் பலர் தற்போது அம்பாரை மாவட்டத்தி;ற்கு விஜயம் செய்து கொண்டுள்ள இத்தருணத்தில் செயலாளர் நாயம் ஹசன் அலி எம்பி கடும் ஆத்திரம் மேலோங்கியவராக கொழும்பு – கல்கிஸ்ஸயில் உள்ள அவரது இல்லத்தில் இருப்பதாக அறியமுடிகின்றது.

முகா உயர் பீட கூட்டம் இடம்பெற்ற வேளை கல்முனை கரைரயோர மாவட்டம் மற்றும் அம்பாரை , திருமலை மாவட்டங்களுக்கு முஸ்லிம் அரச அதிபரை நியமித்தல் தொடர்பிலான ஆவணங்களை தயார்படுத்தி அதனை அரசுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு அந்த ஆவணத்தில் கையொப்பம் இடுமாறு கேட்டிருந்த போது அதற்கு ஹக்கீம் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் ஹசன் அலி இன்றைய கூட்டதில் கலந்து கொள்ளாமைக்கான காரணத்தில் ஒன்றாகும்.  

அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஹசன் அலி மிகவும் உறுதியாய் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Share it:

Post A Comment:

0 comments: