குழந்தையை பலிகொடுத்து புதையல் தோண்ட முயற்சித்த பௌத்த பிக்கு கைது

Share it:
ad
சிசு ஒன்றை பலிகொடுத்து புதையல் தோண்ட முயற்சித்த சிங்கள பௌத்த பிக்கு உள்ளிட்ட எட்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

களனி பெதியாகொட மாவெல்ல ஆவாசவத்த இரண்டு மாடி வீடொன்றில் புதையல் தோண்ட முயற்சிக்கப்பட்டுள்ளது.

பெலியாகொட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

வீட்டின் உள்ளேயே மண்ணைத் தோண்டி வேறு ஓர் அறையில் மண் கொட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பூஜைப் பொருட்கள், புதையல் தோண்டுவதற்கான ஆயுதங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

Share it:

Post A Comment:

0 comments: