அரசாங்கத்தின் மோசடிகளை அம்பலப்படுத்த அமைச்சர் சம்பிக்க திட்டம்..!

Share it:
ad
அரசாங்கத்தை சீண்டிப் பார்க்கும் வகையில் அரசின் ஊழல்கள் மற்றும் கசினோ சூதாட்டம் குறித்த மோசடிகள் தொடர்பான இரகசியத் தகவல்களை வெளியிட அமைச்சர் சம்பிக்க ரணவக்க தீர்மானித்துள்ளார்.

இதற்கேற்ப எதிர்வரும் 05ம் திகதி கொழும்பு மகாவெலி நிலையத்தில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

சம்பிக்க ரணவக்க மின்சாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் நுரைச்சோலை அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்த விடயத்தில் ஊழல் நடைபெற்றிருந்ததாக அமைச்சர் பவித்ரா குற்றம் சாட்டியிருந்தார். இது அமைச்சர் சம்பிக்கவை கடுமையாக சீண்டியுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கத்தின் சில மோசடிகள் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்தி பதிலுக்கு அரசாங்கத்தை சீண்டிப் பார்க்க அவர் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று அவர் நம்புகின்றார்.

அமைச்சர் சம்பிக்கவின் தீர்மானம் குறித்து அறிந்து கொண்டுள்ள அரசாங்கம், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டுகின்றது. அதன் ஒருகட்டமாக மின்சார சபை ஊழல்கள் தொடர்பான புலனாய்வுத்துறை விசாரணைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

-Tw-

Share it:

Post A Comment:

0 comments: