-அஸ்ரப் ஏ சமத்-
இலங்கையில் உள்ள சகல பௌத்த இனவாதிகள் ஒன்றிணைந்து நேற்று பொரளையில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடகவியலாளர் மாநாடு.
பொதுபலசனா, ஞானசாரதேரர், ராவணபலய இந்துனாந்த தேரோ, தேசயித்தி தேசத்திய கலாநிதி குணதாச அமரசேகர, டொக்டர் வந்தபண்டார, பேராசிரியர் இதுரசாரர் தம்ம தேரோ, மற்றும் பௌத்த இயக்கங்கள் ஒன்றினைந்து எதிர்கட்சி வேட்பாளர் மைத்திரக்கு எதிராக சேறுபூசினர்
பிரபகரனின் மகளின் பிறந்த தினத்திற்கு பூச் சொண்டு அனுப்பியவரும் இந்த மைத்திரியின் கூட்டமைப்பில் உள்ளனர்.
இந்த நாட்டை மீள இரண்டாகப் பிரிப்பதற்காகவே ஹக்கீம், சம்பந்தண் ரணில் சந்திரிகா இணைந்துள்ளனர். இவர்களது இரகசியத்தை உடனடியாக மைத்திரிபால சிறிசேனா உடன் பௌத்த மக்களுக்கு வெளியிட வேண்டும். மைத்திரி உடன் கைது செய்யப்படல் வேண்டும். இந்த நாட்டுக்கு சமாதாணத்தை ஏற்படுத்தி யுத்தத்தை வென்று தந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரிண் ஆட்சியை தொடரவேண்டும்.
ஞானசாரத்தேரர் - விடுதலைப்புலிகள் அமைப்பு இந்த கூட்டமைப்பில் 3 உள்ளன. இவர்களை தோல்வியுற பாடுபடல் வேண்டும். மஹிந்த ராஜபக்ச கோட்டாபயா ராஜபக்ச அவர்கள் தலைமையில் கீழ் எமக்கு சுதந்திரம் கிடைத்தது. மைத்திரிபால சிறிசேனா இந்த நாட்டை மீளப் பிரிப்பதற்கு துணைபோகின்றார்.
ராவண பலய மைத்திரிபால சிறீசேனா மகாவலி அமைச்சராக இருக்கும்போது 2 வருடம் மகாவலி பிரதேசத்தில் சூரியாவா பிரதேச விவசாயிகளுக்கு தண்னீரை கொடுக்காது தடுத்து நிறுனத்தியவர். மத்தட்ட தித்த வேலைத்திட்த்தில் இந்த நாட்டின் மக்களது பணம் 130 மில்லியன் ருபாவை எடுத்தவர்களும் இந்த கூட்டமைப்பில் உள்ளனர்.



Post A Comment:
0 comments: