'புறா பிரச்சினை' ஒரு பிள்ளையின் தந்தையான, முஹம்மத் பஹாத் வெட்டிக்கொலை

Share it:
ad
மள்வான ரக்ஷபான பிரதேசத்தில் புறாக்கள் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது சகோதரியின் கணவரைக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முஹம்மத் ஹுஸைன் முஹம்மத் பஹாத் (26 வயது) என்ற ஒரு பிள்ளை யின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வியாழன் (22) மாலை இவருக்கும் இவருடைய மனைவியின் இளைய சகோதரனுக்கும் இடையே ஏற்பட்ட புறாக்கள் சம்பந்தமான பிரச்சினை நீண்டு செல்லவே இளைய சகோதரன் இவரை கூரிய ஆயுதமொன் றினால் குத்திக்கொலை செய்துள்ளார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மஹர நீதிமன்ற நீதவான் மஹிந்த பிரபாத் ரணசிங்க சென்று விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக ராகம பிரதான வைத்தியசாலைக்கு அனுப்புமாறு கட்டளையிட்டார். சம்பவம் தொடர்பாக இறந்தவரின் மைத்துனர் பியகம பொலிஸாரினால் கைது செய்யப் பட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: