'' மைத்­தி­ரி­பா­லவை நம்­பலாம்'' - இம்தியாஸ் பாக்கிர்மாக்கார்

Share it:
ad
- SNM.Suhail-

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் யாருக்கு வாக்களிப்பது என முஸ்லிம்கள் சுயமாகவே தீர்மானமெடுக்கவில்லை. அரசின் இனவாத செயற்பாடுகள் காரணமாக மக்கள் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு தள்ளப்பட்டனர் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார். அவர் விடிவெள்ளிக்கு வழங்கிய விசேட செவ்வி

அர­சி­யலில் இருந்து ஒதுங்­கி­யி­ருந்த நீங்கள் நீண்ட இடை­வே­ளைக்கு பின்னர் மீண்டும் அர­சியலில் மீள்­பி­ர­வே­சித்­துள்­ளீர்கள் இதனை எவ்­வாறு உணர்­கி­றீர்கள்?

நான் தேர்­தலில் கள­மி­றங்­கா­விட்­டாலும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இருந்தேன். தேசிய அமைச்­சி­லி­ருந்து திட்ட அமைச்­சராக செல்­லும்­போது அமைச்­ச­ர­வையில் சிலர் என்­னிடம் 'நீங்­களே தொடர்ந்தும் இருக்­கின்­றீர்கள். புதி­ய­வர்­க­ளுக்கு சந்­தர்ப்பம் வழங்­குங்கள்' என கூறு­வ­துண்டு. எனது தந்தை 1947 ஆண்டு பேரு­வ­ளை பிரதேச சபை தேர்­தலில் போட்­டி­யிட்டார்.

அன்­றி­லி­ருந்து 2000 ஆண்டு வரை எனக்கும் எனது தந்­தைக்­குமே பேரு­வளை மக்கள் வாக்­க­ளித்­துள்­ளனர். இந்­நி­லையில் நான் படித்த புதி­யத­லை­மு­றை­யி­ன­ருக்கு இட­ம­ளிப்­ப­தற்கு தீர்­மா­னத்தை மேற்­கொண்டோன். தலை­மை­யுடன் ஏற்­பட்ட முரண்­பா­டுகள் கார­ண­மாக தேர்­தலில் போட்­டி­யி­ட­வில்லை என்­றாலும் கட்­சிக்­குள்­ளேயே இருந்தேன். கட்­சியில் தந்­தைக்கு பெரும் செல்­வாக்கு இருந்­தது.

எனக்கும் இளம் வயதில் அமைச்­ச­ரவை அந்­தஸ்­த்துள்ள அமைச்­சுப்­ப­த­வியும் கிடைத்­தது. இவற்­றை­விட நாம் எத­னையும் எதிர்­பார்க்­க­வில்லை. நாம் சரி­யான அர­சி­யல்­வா­தி­க­ளாக இருப்பின் யார் இஸ்­லா­மியன் என்­பதை பிற­ம­தத்­த­வர்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­தலாம்.

எனது, ஐக்­கிய தேசிய கட்­சியின் உப தலைவர் பத­வியை பறித்­தார்கள். எனினும் தற்­போது செயற்­கு­ழு­விற்குள் உள்­ளீர்த்­துள்ளார்கள். இதனால் எனக்கு எந்த மன­வ­ருத்­தமும் கிடை­யாது. எமது மார்க்கம் சொல்­லித்­தந்­தி­ருக்கும் அடிப்­ப­டை­யி­லேயே எனது அர­சியல் பய­ணத்தை தொடர்­கிறேன். இது ஒரு மார்க்க ரீதி­யி­லான புனி­தப்­போ­ராட்­ட­மே­யாகும். ஒன்றை குறிப்­பிட்­டுச்­சொல்ல வேண்டும். களுத்­து­றையில் சிங்­கள மக்­கள்­கூட எனக்கு தொடர்ச்­சி­யாக வாக்­க­ளித்து வந்­துள்­ளனர். எமது கட்சி இன, மத வேறு­பா­டு­க­ளின்றி அனை­வ­ருக்கும் இட­ம­ளிக்­கி­றது.

நீங்கள் அர­சி­ய­லுக்கு கொண்­டு­வந்­த­வர்கள் பற்றி கூறுங்­களேன்?

யூசுப் என்­ப­வரை கொண்­டு­வந்­தோம். அவர் மாகாண சபையில் தொடர்ந்து உறுப்­பி­ன­ராக இருந்­த­தோடு ஒரு காலத்தில் பதில் முத­ல­மைச்­ச­ரா­கவும் செயற்­பட்டார். இத­னி­டையே ஜயந்த அபே குண­வர்­தன மற்றும் மூன்று தடவைகள் பேரு­வளை பிர­தேச சபை தலை­வ­ராக இருந்த பது­ருதீன் உள்­ளிட்ட பலரை கொண்­டு­வந்­தி­ருக்­கிறோம். இவர்கள் பெரிய பட்­ட­தா­ரிகள் இல்­லா­வி­டினும் அர­சி­யலில் தேர்ச்­சி­பெற்­ற­வர்­களே.

தேசிய நீரோட்­டத்­தி­லி­ருந்து பிரிந்து முஸ்­லிம்கள் தனி­த்துவ கட்­சிகள் மூலம் அர­சியல் பய­ணத்தை மேற்­கொள்­வது குறித்து உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட முஸ்லிம் கட்­சி­களை புறக்­க­ணிக்க முடி­யாது. அதன் தேவை வடக்­கிலும் கிழக்­கிலும் இருக்­கின்­றது. அதற்­கான தேவை தெற்கில் கிடை­யாது. இங்கு தேசிய ரீதி­யி­லான அர­சி­ய­லோடு ஒன்­றித்து­போ­வதே பொருத்­த­மா­னது. முஸ்லிம் கட்­சி­களின் பிர­வேசம். தனி­பௌத்த கட்­சி­களின் வரு­கைக்கு கார­ண­மா­கி­யது. இன ரீதி­யி­லான கட்­சி­களின் தோற்­றத்­திற்கு காரணம் தேசிய கட்­சி­களே. சிறு­பான்­மை­யினர் தொடர்பில் கவனம் செலுத்­தா­மை­யினால் வடக்கு, கிழக்கு மக்களால் அவை சிங்­கள கட்­சி­க­ளாகவே பார்க்­கப்­பட்­டது.

எனவே இதற்கு தேசிய கட்­சி­களின் தலை­வர்கள் பதி­ல­ளிக்க வேண்டும். தேசிய கட்­சியில் உள்ள முஸ்லிம் தலை­வர்கள் இதனை புரிந்­து­கொண்டு மக்­க­ளையும் கட்­சி­யையும் இணைத்­துக்­கொண்டு செயற்­ப­ட­வேண்டும். இன ரீதி­யான கட்­சிகள் காலா­வ­தி­யாகும் காலம் நெருங்­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. நமது சமூ­கத்தில் சிந்­தனை ரீதி­யி­லான மாற்­ற­மொன்று தேவைப்­ப­டு­கின்­றது. கோபம், வைராக்­கியம் என்­ப­வற்றை புறந்­தள்­ளி­விட்டு தேசிய அர­சியல் நீரோட்­டத்தில் இணைந்து­கொள்­ள­வேண்டும். முப்­பது வருட யுத்­தத்தில் நாம் பல பாடங்­களை கற்­றுக்­கொண்டோம். இந்த கசப்­பான காலம் இனியும் வேண்டாம். தற்­போது மீண்டும் பௌத்த கொடியை தூக்­கிக்­கொண்டு அர­சியல் நடத்த சிலர் புறப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

ஜனா­தி­பதி தேர்­தலில் நீங்­களும் பிர­சா­ரங்­களில் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்­றீர்கள், இன்­றைய கள நிலைமை எப்­ப­டி­யி­ருக்­கி­றது?

1977 ஆம் ஆண்டு மேலெ­ழுந்த அலையை விட பெரிய அலை­யொன்று திரண்­டி­ருக்­கி­றது. 77 ஆம் ஆண்டு அலை பூதா­க­ர­மாக கிளம்­பி­யது. இன்று அலை பூதா­க­ர­மா­கா­விட்­டாலும் தாக்கம் பெரி­தா­கவே இருக்கும். இதற்­கான கார­ணங்­க­ளாக ஊடக அடக்­கு­மு­றைகள் பற்றி பல புள்­ளி­வி­ப­ரங்­களை சுட்­டிக்­காட்­டலாம். அர­சியல் ரீதி­யி­லான பழி­வாங்­கல்கள் அதி­க­ரித்­து­விட்­டன. அர­சியல் தடம்­பு­ரண்­டுள்­ளது.

தாக்­கு­தல்கள் மூலமும் அச்­சு­றுத்­தல்கள் மூலமும் அர­சாங்கம் எமக்கு எச்­ச­ரிக்­கைளை விடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. மக்கள் சரி­யான தீர்­மா­னத்­திற்கு வருவர். இதன் பிர­தி­ப­லனை 9 ஆம் திகதி தேர்தல் முடி­வு­களில் மக்கள் அறிந்­து­கொள்வர்.

ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்­பார்க்­க­லாமா?

ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வதை அறி­வுள்ள சமூகம் முதலில் புரிந்­து­கொள்ளும். 2010 ஜனா­தி­பதி தேர்­தலின் பின்னர் ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முதலில் கள­மி­றங்­கி­ய­வர்கள் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களே. பின்னர் சட்­டத்­த­ர­ணிகள் கிளம்­பினர். மனித உரிமை ஆர்­வ­லர்­களும் வீதியில் இறங்­கினர். இவர்­கள்தான் மக்கள் அபிப்­பி­ரா­யத்தை வெ ளிப்­ப­டுத்­து­ப­வர்கள். நகர் புறங்­களில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன. கிராம மட்­டங்­களில் சமுர்த்தி போன்­ற­வற்றை காட்டி வாக்­கு­களை பெறலாம் என நினைக்­கின்­றனர்.

கிராம மக்கள் புத்­தி­சா­லிகள். கடந்த மாகாண சபை தேர்­த­லின்­போது அர­சாங்கம் வாக்­கு­க­ளுக்­காக பல சலு­கை­க­ளையும் பரி­சி­ல்க­ளையும் பணத்தையும் வழங்­கி­யது. ஆனால் மக்கள் மாற்­றத்­திற்­கான சமிக்­ஞையை காட்­ட­வில்­லையா? உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்கும் தேர்தல் பிர­சா­ரத்­திற்­காக அரசு இலட்­சக்­க­ணக்கில் பணம் கொடுத்­துள்­ளது. என்­றாலும் மக்கள் தெ ளிவா­ன­வர்­களே. இலங்கை மக்­களின் அறிவை குறைத்து மதிப்­பிட முடி­யாது.

பொதுவேட்பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சிறு­பான்மை மக்கள் எவ்­வாறு நம்­பு­வது?

மைத்­தி­ரி­பா­லவை நம்­பலாம் என என்­னால் சான்­றிதழ் வழங்க முடியும். மஹிந்த ராஜ­ப­க்ஷவை வீழ்த்தி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெ­று­வது ஐ.தே.க.வின் வெற்­றி­யல்ல. கொள்­கையின் வெற்­றி­யாகும். மக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் அர­சாங்­கமே இப்­போ­தைக்கு தேவை. நீதித்­துறை சீர்­கு­லைந்­துள்­ளது. உச்ச நீதி­மன்­றத்தின் தீர்­ப்புகள் மதிக்­கப்­ப­டு­வ­தில்லை. நிரு­வாக சேவை­யா­ளர்கள் தொடர்பில் அதி­ருப்தி காணப்­ப­டு­கின்­றது.

இவற்­றுக்­கான சிறந்த கொள்­கைகள் தேவை. இராணுவம் தேர்­த­லுக்­காக பயன்­ப­டுத்­தப்­படக் கூடாது. கல்­விக்­காக ஆறு வீத­மான நிதியை ஒதுக்­கு­வ­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறு­கிறார். ஆசி­யாவில் 2.9 வீதமே கல்­விக்­காக நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. கல்­விக்கு அதிக நிதி­யொ­துக்­கு­வது நாட்டின் அபி­வி­ருத்­திக்கு வழி­வ­குக்கும். அபி­வி­ருத்தி தொடர்பில் அவர் சிறந்த கொள்­கை­களை­கொண்­டி­ருக்­கிறார். 

இலங்­கையில் இல­வசக் கல்­வியை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் ஐ.தே.க. தலை­வர்கள். பின்னர் ஐக்­கிய தேசிய கட்­சியில் இல­வச புத்­தகம், சீருடை, உணவும் வழங்­கப்­பட்­டது. தற்­போது உணவு நிறுத்­தப்­பட்­டுள்­ளது. பாடப்­புத்­த­கமும் சீரு­டையும் உரிய நேரத்தில் கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை. ஒவ்­வொன்­றாக இழந்து வரு­கின்றோம். இல­வச சுகா­தாரம் இப்­ப­டியே. இவ்­வாறு கூறிக்­கொண்டே செல்­லலாம்.

ராஜ­பக்ஷ அர­சாங்­கத்தில் அவற்றின் நிலை­தொ­டர்பில் மக்கள் நன்கு அறி­வார்கள். நான் மைத்­தி­ரி­பால சிறி­சேன என்ற தனி நப­ருக்காக அவரை ஆத­ரிக்­க­வில்லை. நாட்­டிற்கு அவ­சி­ய­மான நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே ஒன்­றி­ணைந்­துள்ளேன். இதற்­கா­கவே எல்­லோரும் ஒன்­றி­ணைந்­துள்­ளனர். வர­லாற்றில் முதன் முறை­யாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா, முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகிய இரு பெருந்­த­லை­வர்கள் இணைந்து வைராக்­கிய அர­சி­யலை இல்­லாமல் செய்­வ­தற்கு முன்­வந்­துள்னர்.

பொது நிகழ்ச்­சி­நி­ர­லுக்கு ஏற்­ற­வ­கையில் நாட்டை அபி­வி­ருத்­தியின் பாதையில் முன்­னெ­டுத்­துச்­செல்­­வ­தற்­கான முயற்சி இது. யுத்­தத்­திற்கு பின்னர் ஜனா­தி­ப­தி­யிடம் 'சந்­தி­ரி­காவும் ரணிலும் யுத்­தத்தை முடி­வு­கட்ட தவ­றி­விட்­டனர். ஆனால் உங்­க­ளுக்கு வாய்ப்பு கிடைத்­தது. ஐ.தே.க.வை இல்­லாது செய்­ய­வேண்டாம். பொது நிகழ்ச்­சி­நி­ரலின் அடிப்­ப­டையில் நாட்டை முன்­னெ­டுத்துச் செல்­லுங்கள்' என்றேன். 'உங்கள் ஆலோ­ச­னைக்கு நன்றி' என அவர் கூறினார். நாட்டின் தலைவர் சரி­யாக இருப்பின் ஏனைய எல்லாம் சரி­யா­கி­விடும். நல்­லாட்­சிக்­கான போராட்­டத்தை அனைத்து மக்­களும் நம்­பலாம்.

மைத்­திரி வெற்­றி­பெற்றால் தேசிய அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்­தப்­போ­வ­தாக கூறி­வ­ரு­கின்­றனர். இது சாத்தியமா?

அனைத்து கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து தேசிய அர­சாங்கம் ஒன்று இயங்கும். சுயா­தீன தேர்தல் ஆணைக்­குழு, பரி­பா­லன ஆணைக்­குழு, சுயா­தீன பொலிஸ் பிரி­வு,­சு­யா­தீன நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுக்கள் உரு­வாக்­கப்­படும். வடக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­த­வுள்ளோம். பின்னர் நடத்­தப்­படும் பொதுத் தேர்­தலில் வேண்­டிய கட்சி ஆட்­சி­ய­மைக்க முடியும்.

இதனால் நிலை­ பேறான அர­சியல் இல்­லாமல் போய்­விட வாய்ப்பு இருக்­கி­றதே?

இதன் மூலம் நிலை­யான அர­சியல் ஒன்று உரு­வாக்­கப்­படும் என்­றுதான் கூற­வேண்டும். பழி­வாங்கும் வைராக்­கிய அர­சியல் இல்­லா­மல்­போகும். ஸ்ரீ.ல.சு.க. பொதுச் ­செ­ய­லா­ளரின் வெற்­றிக்கு ஐக்­கிய தேசிய கட்­சியின் 40 வீத­மான வாக்­குகள் கிடைக்­கப்­போ­கின்­றன. இதன் மூலம் தெளி­வாக எமது அர­சியல் நிலைப்­பாடு புரிந்­தி­ருக்­குமே.

முஸ்லிம் மக்கள் தேர்தல் அறிவிக்கும் முன்­னரே மாற்­றத்­துக்கு தயா­ரா­கி­விட்­டனர். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முஸ்­லிம்கள் தானாக தீர்­மானம் எடுக்­க­வில்லை. இந்த தீர்­மா­னத்­துக்கு தள்­ளப்­பட்­டனர். தமிழ், கத்­தோ­லிக்­கர்­களையும் இந்­நி­லை­மைக்கு இந்த அர­சாங்­கமே தள்­ளி­விட்­டது. இல்­லா­விடின் இவ்­வா­றா­ன­தொரு தீர்­மானம் இவர்­க­ளுக்கு தேவைப்­பட்­டி­ருக்­காது. யுத்­தத்­திற்கு பின்னர் மக்­க­ளுக்கு சந்­தோசம் ஏற்­பட்­டி­ருக்க வேண்டும். அதிவேக பாதை, துறை­முகம் விமான நிலையம் போன்­ற­வற்­றை­யெல்லாம் அமைத்­தனர். இவை நாட்­டு­மக்­க­ளுக்கு தற்­போ­தைக்கு அவ­சி­ய­மில்லை. ஊழலை மைய­மா­க­கொண்டே அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­கின்­றனர். இது மிகவும் அபா­ய­மான கட்டமாகும்.

தற்போது நாட்டில் நிலவும் சர்வாதிகார ஆட்சியை இல்லாதுசெய்ய எவ்வாறான கசாயத்தையும் குடிப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம். ஐ.தே.க. இல்லாது இன்னொரு கட்சிக்காரரை முன்னிறுத்தி வெற்றிபெறச்செய்வது ஆசை இல்லாவிடினும், இப்போதைக்கு இது மிகவும் தேவையானதொன்றாக இருக்கின்றதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். நல்லாட்சியை ஏற்படுத்த விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ள நாம் துணிந்துள்ளோம்.

முஸ்லிம் தலைவர்கள் எதிரணியுடன் தற்போது இணைந்துகொள்கின்றனரே?

இப்போது யாருக்கும் வேறு தெரிவு இல்லை. இந்த நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க, இராணுவ ஆட்சியொன்றை தடுக்க வேறு வழி இல்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசு இன்று இராணுவ ஆட்சி குறித்து அச்சுறுத்துகிறது. ஊடக அடக்குமுறையை பிரயோகிக்கிறது. நாட்டின் அனைத்து மக்களும் சிந்தித்து இந்த தெரிவை மேற்கொள்ளவில்லை இந்நிலைமைக்கு தள்ளப்பட்டுள்னர். யுத்தத்திற்குபின்னர் பிக்குமார்கள் தேசிய கொடியுடன் பன்சலைநோக்கி ஊர்வலம் செய்யும் நிலையை ஏற்படுத்தி வேறு மக்களின் வாக்குகள் தேவையில்லை என அரசு நினைக்கிறது. இந்த போக்கை மாற்றியமைக்க இஸ்லாம், கிறிஸ்தவ, இந்து மக்களுக்கும் ஏன் பௌத்தர்களுக்கும் கூட மைத்திரியை தவிர வேறு தெரிவில்லை.
Share it:

Post A Comment:

0 comments: