மஹிந்த ராஜபக்ஷவுக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் - அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க

Share it:
ad
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்கும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இன்று 14-12-2014  நடைபெற்ற பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு ஜனாதிபதிக்கே. ஜாதிக ஹெல உறுமயவை சேர்ந்த மூன்று பேர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். ஒருவர் திரும்பி வந்தார்.

ஜே.வி.பி ஓரமாக இருந்து ஆதரவு வழங்கி வருகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை முடிவு எடுக்கவில்லை.

இதனால், இம்முறையும் எதிர்க்கட்சிகள் 25 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவும் எனவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: