பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது நீதியமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்வாரென முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் (பாராளுமன்ற உறுப்பினர்) ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார்.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட மற்றும் தொகுதி வாரியாக வகிக்கும் தமது பதவிகளிருந்தும் ராஜினாமா செய்வார்கள் எனவும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார்.
அதேவேளை அமைச்சர் பஸீர் சேகுதாவூத், தமது அமைச்சுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்வாரென, தாம் நம்பவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் அந்த முக்கியஸ்தர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பாக மேலதிக விபரங்களை அறிவதற்காக அமைச்சர் பசீர்சேகுதாவூத்தின் கையடக்க தொலைபேசிக்கு ஜப்னா முஸ்லிம் இணையம் செய்தபோது, சுவிச் ஓப் என பதில் வந்தது.
Post A Comment:
0 comments: