தாம் அமைச்சராக சேவையாற்றிய காலம் முதல் புதிய சட்ட முறைமைகளை நாட்டு மக்களின் நலனுக்காக முன்வைத்ததாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவ – மெதிரிகிரிய பிரதேசத்தில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
லட்ச கணக்கான விவசாய மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சட்ட முறைமைகளை நான் மேற்கொண்டேன்.
பல நிறுவனங்களை கட்டுப்படுத்த முனைந்தேன். எனினும் அதற்கு அனுமதியளிக்கப்படவில்லை.
இவற்றையும் கருத்திற் கொண்டே தாம் விலக தீர்மானித்துள்ளதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments: