ஹக்கீமும், றிசாத்தும் என்ன செய்யப்போகிறார்கள்..? கோத்தா கேட்கிறார்

Share it:
ad
எதி­ர­ணியின் வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஆத­ரிப்­ப­தற்கு ஏதா­வது ஒரு காரணம் இருக்­க­வேண்டும். பொது­வான கார­ணங்­களை இதற்கு சொல்ல முடி­யாது. தென்­ப­குதி வாக்­கு­களைப் பாது­காப்­ப­தற்­கா­கவே ஒப்­பந்தம் செய்­ய­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது.

தமிழ் வாக்­குக்­களை வெல்­லு­வ­தற்­காக மைத்­தி­ரிக்கு ஆத­ரவு என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் கூட்­ட­மைப்பு ஏன் ஜனா­தி­பதி மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷ­வுக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்­க­வில்லை என்று பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ கேள்வி எழுப்­பினார்.

தேசிய தமிழ் பத்­தி­ரி­கை­களின் ஆசி­ரி­யர்­களை நேற்று பாது­காப்பு அமைச்சில் சந்­தித்து பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ கலந்­து­ரை­யா­டினார். இதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இந்தக் கலந்­து­ரை­யா­டலில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

கேள்வி:- ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் உங்­களின் கருத்து என்ன?

பதில்:- ஜனா­தி­பதி வெற்­றி­பெ­றுவார்.

ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் இப்­படி நடக்­க­வில்லை. மக்கள் இதனை மறந்­து­வி­டக்­கூ­டாது.

கேள்வி:- மைத்­தி­ரியை ஆத­ரிக்கும் முடி­வடை அறி­விக்கும் போது சர்­வா­தி­கார ஆட்­சியை நோக்கி இலங்கை செல்­வ­தாக கூட்­ட­மைப்பு குற்றம் சாட்­டி­யுள்­ளது. இது தொடர்பில் உங்­களின் பதில் என்ன?

பதில் :- 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்த நிலை­யுடன் ஒப்­பிட்­டுப்­பார்த்தால் கேலிக்­கு­ரி­ய­தாகும்.

கேள்வி:- அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த ரிஷாத் பதி­யு­தீனின் கட்சி விலகி எதி­ர­ணிக்கு ஆத­ரவு அளித்­துள்­ளது. இது குறித்து என்ன கூறு­கின்­றீர்கள்.?

பதில்:- ரிஷாத் பதி­யுதீன் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு என்ன நிலைப்­பாடு எடுக்­க­வுள்­ளது. வன்­னிப்­ப­கு­தியில் மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு பகு­தி­களில் தமி­ழர்­க­ளது காணிகள், சுவீ­க­ரிக்­கப்­பட்­ட­தா­கவும், இவ­ரினால் முஸ்­லிம்கள் அங்கு குடி­ய­மர்த்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தி­ருந்­தன. மீன்­படி தொழி­லுக்கு தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கவும், குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்­தது. இப்­போது ரிஷாத் எதி­ர­ணியில் இடம் பெற்­றுள்ளார். இந்த நிலையில் முஸ்­லிம்­களின் குடி­யேற்­றத்தை நிறுத்­து­மாறு கூட்­ட­மைப்பு மைத்­தி­ரி­யிடம் கோருமா? சுவீ­க­ரிக்­கப்­பட்ட காணி­களை மீள வழங்­கு­மாறு கூட்­ட­மைப்பு கூற முடி­யுமா?

ஜனா­தி­ப­தி­யுடன் ரிஷாட் இருக்கும் போது காணி சுவீ­க­ரிப்பு தொடர்பில் குற்­றச்­சாட்­டுக்கள் எழுப்­பப்­பட்­டன. இன்று மைத்­தி­ரி­யிடம் அவர் சென்ற பின் அவ­ருக்கு புனர்­வாழ்வு அளிக்­கப்­பட்டு விட்­டதா?

கூட்­ட­மைப்பு இந்த விட­யத்தில் என்ன செய்யப் போகின்­றது. இதற்கு கூட்­ட­மைப்பு பத­ல­ளிக்­க­வேண்டும். கிழக்கில் அம்­பா­றை­யி­லும தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த நிலையில் ஹக்கீம், தற்­போது எதி­ர­ணியில் நிற்­கின்றார். இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வு காண கூட்­ட­மைப்பு என்ன செய்­யப்­போ­கின்­றது. மட்­டக்­க­ளப்­பிலும் தமிழ் மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதனை கூட்­ட­மைப்­பி­னரால் மீளப்­பெற முடி­யுமா?

ஜனா­தி­ப­தி­யுடன் இருக்கும் போது இவர்கள் கெட்­ட­வர்­க­ளாக இருந்தனர். தற்போது மைத்திரியுடன் இணைந்ததும் நல்லவர்களாக மாறிவிட்டனரா? இது குறித்தும் கூட்டமைப்பு பதிலளிக்கவேண்டும்.
Share it:

Post A Comment:

0 comments: