தாய் பாசத்தின் மகிமை..!

Share it:
ad
சீனாவின் ஹெனாள் மாகாணத்தில் உள்ள ஷெங்ஷு பகுதியை சேர்ந்தவர் குயூ யுயான்யுயான் (26). இவர் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தார். இவர் கர்ப்பம் அடைந்த போது அவரை புற்று நோய் தாக்கியது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவருக்கு ‘கீமோ தெரபி’ சிகிச்சை பெற டாக்டர்கள் வற்புறுத்தினர்.

அந்த சிகிச்சை பெற்றால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என கருதிய அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதற்கிடையே அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்றார். இருந்தும் குழந்தை பிறந்த 100–வது நாளில் அவர் பரிதாபமாக இறந்தார். இத்தகவல் சீனாவில் ‘வெய்போ’ இணைய தளத்தில் வெளியாகியது. அதை 1 கோடி பேர் பார்த்துள்ளனர். அவரது தாய்ப்பாசத்தை வெகுவாக புகழ்ந்துள்ள அவர்கள் அவரது மகன் நீடூடி வாழ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Share it:

Post A Comment:

0 comments: