பசில், கோத்த, டளஸ் அமெரிக்காவுக்கு உறுதிமொழி வழங்கியுள்ளனர் - சோமவன்ஸ அமரசிங்க

Share it:
ad
ராஜபக்ஷவினருக்கு இருப்பது கிறீன் கார்ட் ஏகாதிபத்திய எதிர்ப்பு எனவும் ஐக்கிய அமெரிக்காவின் சகலவற்றை பாதுகாப்பதாக எந்த சந்தர்ப்பத்திலும் ஆயுதம் ஏந்தவும் தயார் என அவர்கள் இறைவன் முன் சத்தியம் செய்துள்ளதாகவும் ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமையை பெறுவதற்காக சத்தியம் செய்து உறுதிமொழி எடுத்துகொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறும் ஒருவர் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டின் அரசாங்கத்திற்கோ, அதன் இளவரசர் அல்லது மன்னருக்கு இருந்த சார்பு நிலைமை மற்றும் பக்தியை கைவிடுவதாக சத்தியம் செய்து உறுதிமொழியை வழங்க வேண்டும்.

அத்துடன் அமெரிக்காவின் அரசியல் அமைப்பு, சட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் ஏற்படும் எதிரிகளில் செயற்பாடுகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதாகவும் உறுதிவழங்க வேண்டும்.

தேவை ஏற்பட்டால் அமெரிக்காவுக்காக ஆயுதம் ஏந்தவும் அமெரிக்க இராணுவத்தின் சிவில் செயற்பாடுகளில் ஈடுபடவும் சட்டத்தின்படி கடமைப்பட்டுள்ளதாகவும் உறுதி வழங்க வேண்டும்.

இந்த உறுதிமொழிகளை சுதந்திரமாக வழங்குவதாகவும் எந்த மன ரீதியான நிபந்தனைகளில் அடிப்படையில் வழங்கவில்லை என்றும் இதற்கு இறைவன் தனக்கு உதவ வேண்டும் எனவும் கூறவேண்டும்.

அமெரிக்காவில் குடியுரிமை பெறும் இலங்கையர்கள் எவராக இருந்தாலும் இந்த உறுதிமொழிகளை எடுக்க வேண்டும்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அமைச்சர் டளஸ் அழக பெரும ஆகியோர் ஆண்டவர் முன்னிலையில் இப்படியான சத்திய உறுதிமொழியை வழங்கியே அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளனர்.

இவர்களின் கடந்த கால செயற்பாடுகளை கவனிக்கும் போது, இவர்கள் இந்த சத்தியத்தை உறுதியாக கடைப்பிடித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

2008 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டதுடன் அதில் அமெரிக்கா சார்பில் ரொபர்ட் ஓ பிளேக்கும் இலங்கை சார்பில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கையெழுத்திட்டனர். இதனை ஒரு முக்கியமான விடயமாக கருத முடியும்.

இந்த உடன்படிக்கை மூலம் பிராந்தியத்தில் யுத்த நிலைமை ஒன்று ஏற்பட்டால் அமெரிக்காவுக்கு தேவையபன சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் இலங்கை வழங்க வேண்டும்.

இவர்களுக்கு இலங்கை ஒரு தற்காலிக வதிவிடம் மாத்திரமே. இதன் காரணமாகவே இலங்கைக்கு சார்பாக செயற்படுவதற்கு பதிலாக ஆண்டவரிடம் உதவிக் கோரி அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று தமது பக்கசார்பை பறைச்சாற்றி விட்டு இலங்கை வருகின்றனர் எனவும் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share it:

Post A Comment:

0 comments: