மக்களை நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது, அவை கொஞ்ச காலத்திற்கே நீடிக்கும் - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

Share it:
ad
ஆசியாவின் ஆச்சரியம் எங்கே என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.



சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போலி பிரச்சாரங்களின் மூலம் மக்களை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது, அவை கொஞ்ச காலத்திற்கே நீடிக்கும்.

மக்களினால் சமூகத்தினால் உணரக்கூடிய அபிவிருத்தியே உண்மையானது.

அபிவிருத்தி அடைந்துள்ளது என்பதனை ஒவ்வொருவரையும் குத்தி உணரச் செய்ய முடியாது.

அனைத்து இன மக்களுக்கும் ஒன்றிணைந்து வாழக்கூடிய ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்பும் வல்லமை ஐக்கிய தேசியக் கட்சிக்கே காணப்படுகின்றது.

சமூக நீதி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் இனங்களுக்கு இடையிலான ஐக்கியம் ஆகிய மூன்று பிரதான காரணிகளையும் சிறந்த முறையில் முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே முடியும்.

என்னை வெளியேற்றியவர்களே இன்று என்னை அழைத்து கட்சியில் இணைந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமானது என்றே கருதுகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.


Share it:

Post A Comment:

0 comments: