சகல முஸ்லிம்கள் ஹஜ்ஜுக்கு அனுப்புவதாக ஜனாதிபதி கூறியதற்காக நாம் ஆச்சரியப்படவில்லை

Share it:
ad
இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஹஜ் செய்வதற்காக மக்காவுக்கு அனுப்பி வைப்பேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை தொடர்பில் பொதுபல சேனாவின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்றைக் கூறுகிறார். இலங்கையிலுள்ள அனைத்து பௌத்தர்களையும் அடுத்த வருடம் புத்தகாயவுக்கு அனுப்புவேன் என்று அவர் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது போன்றுதான் மக்காவுக்கு அனுப்புவதாக அவர் கூறியுள்ளதனையிட்டும் நாம் ஆச்சரியப்படவில்லை. இதுதான் அரசியல். என்றும் கலகொடஅத்தே ஞானசாகர தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழில் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
சிங்களத்தில் லங்கா சீ நியுஸ்
Share it:

Post A Comment:

0 comments: