பசில் ராஜபக்ஸவின் சவாலில் தோற்றுப்போன எதிர்கட்சிகள்..!

Share it:
ad
எதிர்க்கட்சிகள் முடிந்தால் நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்துக் காட்டட்டும் என்று அமைச்சர் பசில் ராஜபகஷ சவால் விட்டிருந்தார்.

களனி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு சவால் விடுத்திருந்தார்.

அவரின் சவாலுக்கேற்ப இன்று பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் வெற்றியீட்டியது.

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 95 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. இதில் ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் எதிராக ஐதேக, ததேகூ, ஜேவிபி போன்ற கட்சிகள் வாக்களித்த நிலையில், ஆதரவாக ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வாக்களித்தன.  கட்சியை விட்டு வெளியேறியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவருகிறது.
Share it:

Post A Comment:

0 comments: