மஹிந்த ராஜபக்ஸவை பதவி கவிழுங்கள் - நரேந்திர மோடியிடம் கோரிக்கை

Share it:
ad
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பதவி கவிழ்க்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கி அதற்கு பொருத்தமான மற்றுமொருவரை பதவியில் அமர்த்துமாறு கோரியுள்ளார்.

தமிழ் மக்களின் நலன்களை உறுதி செய்யக் கூடிய ஒருவரையே பதவியில் அமர்த்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எவ்வாறு பதவி விலக்க வேண்டும் என்பது நரேந்திர மோடிக்கு தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு விரோதமாக செயற்படும் அரசாங்கத்தை நீக்க வேண்டியது பிராந்தியத்தின் பலம்பொருந்திய நாடான இந்தியாவின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஜனாதிபதி மஹிந்த செயற்பட்டுள்ளதாகவும் நாட்டில் ஜனநாயகம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்தவை எவ்வாறு பதவி கவிழ்ப்பது என்பது தமக்கு தெரியாது என்ற போதிலும், அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நிச்சயமாக தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலக்குவது குறித்து மோடிக்கு தெரியாவிட்டால் அமெரிக்காவின் உதவியை நாட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: