பட்டமளிப்பு விழாவில், பால் கொடுத்த தாய்

Share it:
ad

பிரித்தானியாவில் தாயார் ஒருவர் தனது பட்டமளிப்பு விழாவின் போது குழந்தைக்கு பால் கொடுத்த புகைப்படம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பிரித்தானியாவின் பிரிஸ்பேன்  நகரை சேர்ந்த ஜக்கி சார்கே  என்ற பெண் சன்ஷைன் கோஸ்ட்  என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் தனது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஜக்கி, தனது 6 வார குழந்தைக்கு பால் கொடுத்துள்ள புகைப்படத்தை, அவரது பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்துக்கு இதுவரை 95,000 க்கும் மேற்பட்ட நபர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். 

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது பட்டபடிப்பை முடித்துவிட்டு அதே சமயத்தில் இரு குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளது மகிழ்ச்சியை தருகிறது என்றும் என்னை போன்ற தாய்மார்கள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க இந்த புகைப்படத்தை வெளியிட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பெண், வாழ்க்கை மற்றும் படிப்பு இரண்டையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: