நாமல் ராஜபக்ஷவுக்கு திருமணம் பேசிய, விஜயகலா மகேஸ்வரன்

Share it:
ad
தேசிய நல்லிணக்கத்துக்காக நாமல் ராஜபக்ஷ, யாழ். தமிழ் யுவதியொருவரை மணமுடிக்க வேண்டுமென்று விஜயகலா எம்.பி. ஆசை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷவை சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ என்றாலே வடக்கில், யாழ்ப்பாணத்தில் இளைஞர், யுவதிகள் அதீத அபிமானம் வைத்திருக்கின்றார்கள். நீங்கள் எங்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ் யுவதியை மணமுடித்தால் இந்த இனப்பிரச்சினை விவகாரமும் முடிந்துவிடும்.

தேசிய நல்லிணக்கமும் உறுதிப்படுத்தப்படும். அவ்வாறு எண்ணம் இருந்தால் சொல்லுங்கள்,  நான் நல்ல மணப்பெண் பார்த்துத் தருகிறேன் என்று விஜயகலா எம்.பி. தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்த நாமல் ராஜபக்ஷ,  நான் இப்போதைக்கு திருமணம் குறித்து நினைத்துப் பார்க்கவில்லை. இன்னும் ஏராளம் பணிகளை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இருந்தாலும் இது குறித்து எனது பெற்றோரிடம் பேசிப் பாருங்கள் என்று கூறியுள்ளதாக சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Share it:

Post A Comment:

0 comments: