எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும், மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் வெல்லக் கூடிய வாய்ப்பு

Share it:
ad

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவே தெரிவுசெய்யப்டுவார் என்று சர்வதேச புகழ்பெற்ற போர்ப்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது.

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த விசேட கட்டுரையொன்றிலேயே போர்ப்ஸ் சஞ்சிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

“Ten Reasons To Invest In Sri Lanka“ எனும் தலைப்பில் இந்த சஞ்சிகை கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கையில் பொருளாதார வளர்ச்சி குறி்ப்பிடத்தக்க வகையில் இருப்பதாகவும், அதன் காரணமாக முதலீட்டுக்கு உகந்த நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், பொருளாதாரம், உட்கட்டமைப்பு, பங்குச்சந்தை என அனைத்துத்துறைகளிலும் பாரிய வளர்ச்சி காணப்பட்டிருப்பதாக போர்ப்ஸ் சஞ்சிகையின் கட்டுரையாளர் ஜோன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை வளர்ச்சி, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அதிவேகப்பாதைகள் என்பனவும் கட்டுரையில் சிலாகிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் எதிர்வரும் தேர்தலிலும் ஜனாதிபதியே மீண்டும் வெல்லக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அக்கட்டுரை தொடர்ந்தும் தெரிவிக்கின்றது.

Share it:

Post A Comment:

0 comments: