ஜனாதிபதியாக மஹிந்த 3வது முறையாக தெரிவானால் அவர் சர்வதிகாரியாகவே கருதப்படுவார் - சரத் என். சில்வா

Share it:
ad
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலோ அல்லது பதவி விகித்தாலோ அவர் ஒரு சர்வதிகாரியாகவே கருதப்படுவார் என முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஆபிரிக்கா நாடுகளில் சர்வதிகாரத்துக்கு எதிராக எழுந்த போராட்டத்தினால் இன்றும் பிரச்சினை வலுக்கிறது. அந்தநிலை இலங்கையிலும் வரலாம். 

அத்துடன் அரசாங்கத்திடம் அதிகாரம் இல்லை. ஜனாதிபதியிடமே இருக்கிறது. சட்டம், நீதி, நிர்வாக அதிகாரம் தனியாளரிடம் இருப்பதால் நீதியும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்த முடியாதுள்ளது. பொலிஸாராலும் சுதந்திரமாக செயற்படமுடியாதுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share it:

Post A Comment:

0 comments: