கட்டுநாயக்காவில் விமான விபத்து

Share it:
ad

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமொன்றின் பின்புறத்திலுள்ள இடதுபக்க டயர் வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று இன்று மாலை 4.20 மணியளவில் இடம்பெற்றது. 

இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம் சிறியரக விமானம் ஒன்று எனவும் இதில் மூவர் மாத்திரமே பயணிகளாக இருந்துள்ளனர் என்றும் இந்த விபத்தால் எவருக்கும் எவ்வித சேதமும் இல்லை எனவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

டயர் விபத்துக்குள்ளானதை அடுத்து, புதிய டயரொன்று பொருத்தப்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய தகவல்கள் மேலும் தெரிவித்தன.  -Tm-
Share it:

Post A Comment:

0 comments: