ஞானசாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு உத்தரவு

Share it:
ad
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு கொழும்பு,கோட்டை நீதவான் திலின கமகே, கொம்பனிவீதி பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் 1ஆம் திகதிக்கு முன்னதாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஜாதிக பல சேனாவின் முக்கியஸ்தரான வட்டரக்க விஜித்த தேரர் தாக்கல் செய்திருந்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணி மைத்திரி குணரத்னவை தூசித்தமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share it:

Post A Comment:

0 comments: