பிரதமர் பதவி வழங்கப்பட்டால், அதனை ஏற்க தயார் - மைத்திரிபால சிறிசேன

Share it:
ad
பிரதமர் பதவி தனக்கு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தம்மீது நம்பிக்கை வைத்து அந்த பொறுப்பை ஒப்படைத்தால், அதனை தாம் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளதாக சிறிசேன கூறினார்.

இதேவேளை பொலநறுவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் சபையில், மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அது பற்றி தமக்கு தெரியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share it:

Post A Comment:

0 comments: