கட்சிகளிலிருந்து பல்டி அடிக்கமுடியாது, இரட்டைப் பிரஜா உரிமையுள்ளவர் தேர்தலில் போட்டியிட தடை

Share it:
ad
கட்சித் தாவல்களை மேற்கொள்ளும் உறுப்பினர்களின் பதவிகளை ரத்துச் செய்வதற்கான புதிய சட்ட திட்டங்களை வரைவதற்கு தேசிய நிறைவேற்றுச் சபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு தேசிய, பிரதேச தேர்தல்களில் போட்டியிட முடியாதெனக் கூறும் சட்டங்களைக் கொண்டு வருவதும் தொடர்பாகவும் ஆராயப்பட்டு ள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.

இந்த நிறைவேற்றுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாதுலுவாவே சோபித தேரர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுர குமார திசாநாயக்க. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரவூப் ஹக்கீம், ஆர். சம்பந்தன். சரத் பொன்சேகா, மனோ கணேசன். ரிசாட் பதியுதீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாளை 20 ஆம் திகதி இச்சபை ஜனாதிபதி செயலகத்தில் மீண்டும் கூட உள்ளது. 
Share it:

Post A Comment:

0 comments: