-Tm-
அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஸ்ட, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து, அப்பிரிவின் பதில் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எச். மார்சோம நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த காலம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்களின் தொலைபேசி அழைப்புகளை அரச புலனாய்வுப் பிரிவு பதிவு செய்து வந்தது. இவ்வாறு தொலைபேசி அழைப்புக்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட நபரும் அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments: