எதிரணி கட்சிகளின் கொள்கைகள் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வேறுபாடுகளைக் கொண்டது - பீரிஸ்

Share it:
ad
-மர்லின் மரிக்கார்-

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இந்நாட்டு சிறுபான்மை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஏற்பாடு என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்  தெரிவித்தார். தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்திப்பொன்றை நடாத்தினார். இச்சந்திப் பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்சமயம் அவர் மேலும் கூறுகையில்:-

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பான ஏற்பாடு மாத்திரமல்லாமல் அவர்களது உரிமை களையும். அபிலாஷைகளையும் பெற்றுக் கொள்ளுவதற்குரிய சிறந்த ஏற்பாடுமாகும்.

இவ்வாறான நிலையில் மைத்திரிபால சிறிசேன தெரிவானால் அந்த ஏற்பாட்டை நீக்கிவிடுவார். அது சிறுபான்மை மக்களுக்கே பாதிப்பாக இருக்கும். எதிரணிக் கூட்டில் இணைந்துள்ள கட்சிகளின் கொள்கைகள் மலைக்கும் மடுவுக்குமிடையிலான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. ஐ. தே. க.வின் கொள்கைகளை ஜே. வி. பி.யோ, ஜாதிக ஹெல உருமயவோ ஏற்றுக் கொள்ளாது அக்கட்சிகளின் கொள்கைகள் பொது இணக்கப்பாடுகளுக்கு வர முடியாதவை. ஜாதிக ஹெல உருமய மாகாண சபை முறைமை, தேச வழமை சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவற்றை ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால் ஜாதிகஹெல உருமய அதற்கு எதிரான கட்சி. ஐ. தே. க. தனியார்மயப்படுத்தலுக்கு முன்னுரிமை அளிக்கின்றது. ஜே. வி. பி. அதற்கு முற்றிலும் எதிரானது. இவ்வாறு கொள்கை கோட்பாட்டு ரீதியிலான முரண்பாடுகள் நிறைந்த கூடாரமாக எதிரணியின் கூட்டு உள்ளது. அக்கூட்டி னால் நாட்டிற்கு ஒரு போதும் விமோ சனம் கிடைக்காது. அவர்கள் ஜனாதிபதி யுடன் பொறாமை கொண்டே செயற் படுகின்றனர். மற்றப்படி அவர்கள் நாட் டில் அன்பு கொண்டு செயற்படவில்லை. அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகக் கதைக்கின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை 24 மணி நேரத்தில் ஒழிப்பதாக சிலரும், 100 நாட்களில் ஒழிப்பதாக இன்னும் சிலரும் ஜனாதி பதியின் பதவிக் காலத்தை 04 வருடங்க ளுக்கு குறைக்கப் போவதாக வேறு சிலரும் கூறுகின்றனர். இவை அனைத் தும் எதிரணி கூட்டின் கூற்றுக்களே. அக்கூட்டு குழம்பிய குட்டையே.

மலேசியா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் ஒரே கட்சியே நீண்ட காலமாக அந்நாடுகளை ஆட்சி செய்து வருகின்றன. அதனால் அந்நாடுகள் பெரிதும் அபிவிருத்தி அடைந்துள்ளன. மக்களும் பெரிதும் அவற்றின் பிரதி பலன்களை அனுபவித்து வருகின்றனர். மாற்றம் மக்களுக்கு நன்மை பயக்காது.

2005 ல் நாட்டு மக்களின் பிரதான தேவை யாக எது இருந்ததோ அதனை ஜனாதிபதி நிறைவேற்றினார். அதே போன்று 2010 ஆம் ஆண்டில் மக்களின் தேவ¨யாக எது இருந்ததோ அதனை நிறைவேற்றினார்.
Share it:

Post A Comment:

0 comments: